இதை விட எது பொரிது

காதலுக்கு வயசே இல்லப்பா!


குட்டிக் காதலர்களான 6 வயது சிறுவனும் 7 வயதுடைய சிறுமியும் திருமண பந்தத்தில் இணைய ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
மிகா மற்றும் அனா லெனா என்ற இந்த சின்னஞ்சிறு ஜோடி, வெப்பமான ஆபிரிக்க காலநிலையில் திருமணம் செய்து கொள்ளவென நீச்சல் உடைகள், குளிர் கண்ணாடிகள் மிதவை என்பன சகிதம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு சாட்சியாக அனா லெனாவின் 5 வயது சகோதரியையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
சின்னஞ்சிறு காதலர்களின் குடும்பத்தினர் புதுவருட தினத்தை ஒன்றாக கொண்டாடிய சமயமே மிகா இந்த திருமணத்துக்கான யோசனையை முன்வைத்துள்ளான்.
பெற்றோர் புதுவருட கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளை சிறுவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்.
இரவு பெற்றோர் உறங்கச் சென்றதும், தமது திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் சிறுவர்கள் களம் இறங்கினர். அவசர அவசரமாக தமக்கு தேவையான வெப்ப கால ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர்.
ஹனோவரின் புறநகர்ப் பகுதியிலமைந்த தமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மின்சார வண்டியில் ஏறி ஹனோவர் புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சிறுவர்கள் மூவரும் புகையிரத நிலையத்தில் ஹனோவர் விமான நிலையத்துக்கு செல்லும் புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த காவல் அதிகாரியொருவர் சிறுவர்களின் விசித்திர நடவடிக்கையால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பணமும் விமானப் பயணச்சீட்டுகளும் இல்லாத நிலையில் வயது வந்தவர்கள் எவரதும் துணையும் இன்றி காணப்பட்ட இந்த சிறுவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதையடுத்து, இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
ஆபிரிக்காவின் வெப்பமான காலநிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியே அந்நாட்டுக்கு பயணம் செய்ய முடிவெடுத்ததாக சின்னஞ்சிறு காதலர்கள் தெரிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள். (அப்பாடா, எப்படியொரு காதல் முடிஞ்சா நீங்களும் ரைபண்ணுங்க!ஆனால் மாட்டீகிறாதீங்க!)

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? (ellarukum ellaam porunthaatu)

இலங்கையர்கள்:
1) சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர் ,அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காகபத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம்வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6) தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்துவைப்பார்கள்.

7) குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்றுஇருக்கும்.

8) தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர்ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) 'இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது' என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்துமணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or newcouch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14) தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்றுசொல்லும் பெற்றோர்கள்; மற்ற 'Uncles And Aunties' என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத்தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19) பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர்தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும்சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet)தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.

23) திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்க


24) திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்குவிருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில்சந்தேகமே இல்லை

See attached media release.

A 22 year old Tamil asylum seeker attempted suicide this evening and is now undergoing treatement in hospital. This is his second attempt of suicide. He was displaced many times during the Sri Lankan governments aerial bombardment and was an eyewitness to his father and brother being killed and his nephews and nieces loose their limbs. After spending several weeks in Sri Lanka's notorious internment camp, he escaped and found his way to Australia on a leaky boat to claim asylum. His application was rejected and he had nightmares thinking of the possible deportation and torture in Sri Lanka. Today, he attemped suicide and is currently in hospital. This is his second attempt to take his life. This is not the first asylum seeker to attempt suicide in detention in Australia and won't be the last. Australian Department of Immigration Policy on on torture and trauma victim clearly states that detention of traum victims should be only as a last resort. But hundreds of torture and trauma victims continue to be in detention - at times over a year! Tamil asylum seekers, who understand what it feels like to suffer mental health issues, will be participating in Beyond Blue's Movember starting on Monday. They want to show empathy to men in Australia who suffer mental trauma like them and also to give back to the Australian community.

விடியலைத்தேடும் யாழருவி

தாயின் பாலுக்கு அழுத காலம்போய் தாயின் மார்பில் பால்சுரக்க தாயின்முன் முண்டமாய்க்கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் எண்ணிக்கை கொஞ்சமா நெஞ்சமா? ஏன் இவ்வாறான வெறித்தனமாக வாழ்க்கைதாயைத்தவிர வேறு ஒன்றும் தெரியாத பாலகனை கொல்வது ஏன்?இதுவா உனது புத்தனின் போதனை!

அன்னை திரேசா


AM - குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் வலம் வந்தவர் அன்னை திரேசா. மகத்துவம்மிக்க மாபெரும் பணிகளை ஆற்றி வந்த இந்த மனிதநேயம் மரணித்து எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி பதினொரு வருடங்கள் நிறைவு பெறுகிறது. இவ்வொளி விளக்கு இவ்வுலகில் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியமே. யார் இந்த அன்னை திரேசா? கருணையே வடிவான இம்மலர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியருக்கு கடைக்குட்டியாக பிறந்தது. ஞானஸ்நானத்தின் வழியே கொன்சா அக்னஸ் என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்ட இம்மலர் 1916 ஆம் ஆண்டு தனது ஐந்தாம் வயதில் முதல் நன்மை திருவருட்சாதனத்தை பெற்றுக் கொண்டது. எந்தவொரு பணி வாழ்வில் ஈடுபடுவோரும் தமது வாழ்வில் மேடுபள்ளங்களை சந்திப்பது இயற்கையே. அப்படித்தான் இம்மலரின் வாழ்விலும் ஏற்பட்டது. தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தது. இதனால் இக்குடும்பம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய சூழலில் இம்மலர் இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தியது. தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டது. அத்துடன் தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டது. அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற விழைந்தார். இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்' என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய பெருந்தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார். அதே ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தனது "அர்ப்பண உறுதி' வார்த்தைப்பாட்டின் போது கொன்சா அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் திரித்துக் கொண்டார். அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். அன்னையவர் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருந்தது. தனது உள்ளத்து உணர்வுகள் இறை ஏவுதலால் நிரம்பப் பெற்றிருப்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது. ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். இது அன்னையவர் தனது பணிக்கு அடித்தளமிட்ட முதல் அத்திவாரமாகும். தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி தொடங்கி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார். எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றி கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். ஆக, அன்னையின் செயலில் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கினார். இதனிடையே அன்னையவர் தினமும் கரத்தில் செபமாலையை ஏந்தி செபித்து அனுதினமும் திவ்விய நற்கருணையை உட்கொண்டு இறைவனின் சந்நிதியில் சங்கமிக்கலானார். அன்னையின் வழியில் பல மாணவர்கள் இணைந்து கொள்ளலாயினர். அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார். 1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். அத்துடன் வெனிசுலா நாட்டிலும் இச்சபையை ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெனிசுலாவில் மட்டுமன்றி உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற விளைந்தனர். இத்தகைய நிலையில் சபையின் உயர் நோக்கத்தை அறிந்துணர்ந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர். மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். இச்சபைகள் 1980 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினூடாக யாவரினதும் கண்கள் அவரின்பால் திரும்பின. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச விருதான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமையை வழங்கியது. மேலும் அன்னையவர் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு அப்போதைய கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் தோமஸ் குரே ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னையவர் இரு அருட் சகோதரிகளுடன் இலங்கை வந்து இரு மாதங்கள் தங்கியிருந்தார். அவ்வேளையில் சேரிப் புறங்களுக்குச் சென்று பல உதவிகளை புரிந்தமை நினைவு கூரத்தக்கது. செக்கடித்தெரு புனித அன்னம்மாள் பங்கில் "பிரேம் நிவாஸ' எனும் பெயரில் சபை ஆரம்பிக்கப்பட்டது. காலப் போக்கில் இடவசதியின்மை காரணமாக அது முகத்துவாரம் சாந்தி நிவாஸவிற்கு மாற்றப்பட்டு சேவைதனை தற்போது தொடர்கிறது. அத்துடன் மொரட்டுவ, கண்டி, திருகோணமலை, வவுனியா, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அன்னையின் வழியில் சேவை இல்லங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன. அர்ப்பணிப்பின் இலக்கணம், சேவைகளின் பிரதிவிம்பம் அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காலப் பகுதியை ஏழைகள், பிணியாளர்கள், துன்பப்பட்டவர்கள், அநாதைகள் ஆகியோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஆறுதலுடன் இறை சந்நிதியில் சங்கமித்தார். அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாட வந்தார். அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். அன்னை திரேசாவின் வழியே அப்பொறுப்பினை தற்போது ஏற்று அன்பின் துறவற சபையை வழி நடத்தி வரும் அருட் சகோதரி நிர்மலா உள்ளிட்ட உலகெங்கும் பரந்து வாழும் அன்னை திரேசாவின் அன்பின் துறவற சபையின் அருட் சகோதரிகளின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம்

பாசத்தின் பிறப்பிடம்


பாசத்தின் பிறப்பிடம்

உயிருடன் கலந்த உறவு அம்மா

நாடித்துடிப்பின் ஒலி அம்மா

என் இதயத்தில் என்றும் அழியாத உறவு அம்மா

எனக்கு சொந்தமான உறவு என் அம்மா